19 13
இலங்கைசெய்திகள்

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகள் குறித்து பொலிஸார் வெளியிட்ட எச்சரிக்கை

Share

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகள் குறித்து பொலிஸார் வெளியிட்ட எச்சரிக்கை

இலங்கையில் அதிகரித்து வரும் இணைய மோசடிகளுக்கு மத்தியில், மோசடிகளில் ஈடுபடுபவர்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் மட்டுமே ஊடுருவல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் வங்கி அமைப்புகள் அல்லது நிதி நிறுவனங்களின் கணக்குகளில் ஊடுருவல் செய்த சம்பவங்கள் இலங்கையில் அல்லது உலகில் எங்கும் பதிவாகவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில், பலரின் தனிப்பட்ட கணக்குகளில் ஊடுருவல் செய்து, பல மில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முன்னணி தனியார் வங்கியொன்றின் தனிப்பட்ட கணக்கு அண்மையில் ஊடுருவப்பட்டு சுமார் 80 மில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தங்கள் பொறுப்பற்ற நடத்தை மற்றும் அலட்சியத்தால் இந்த மோசடிகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இந்தநிலையில்; மோசடியால் சிக்கிக்கொள்ளும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளின்போது, வங்கிகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும் தல்துவ தெரிவித்துள்ளார்.

வாராந்தர அமைச்சரவை மாநாட்டில் நேற்று பங்கேற்ற அவர், கைப்பேசிகள் மற்றும் 250 மடிக்கணணிகளை கைப்பற்றி சீனர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசடி செய்பவர்கள் விருந்தகங்களில் மற்றும் வீடுகளில் தங்கியிருந்ததாக கூறிய அவர், தங்களுடைய வளாகத்தை வாடகைக்கு விடுபவர்கள் தங்கள் வளாகங்களில் மோசடிகள் நடப்பதை அறிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த மோசடி செய்பவர்கள் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கணக்குகளில் ஊடுருவி கிரிப்டோ கரன்சியாக இலட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றுகிறார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...