tamilni 202 scaled
இலங்கைசெய்திகள்

தேசிய அடையாள அட்டை தொடர்பில் தகவல்

Share

2022 ஆம் ஆண்டுக்கான ஆட்பதிவு திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 04 வீதமானவை பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், ஆட்பதிவு திணைக்களம் 6,28,973 தேசிய அடையாள அட்டைகளை அச்சிட்டுள்ளது.

இவற்றில், 22,407 பழுதடைந்துள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தவறான அடையாள அட்டைகள் PVC மற்றும் பாலிகார்பனேட் அட்டைகளில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகையான அட்டைகள் மூலம் அச்சிடப்பட்ட குறைபாடுள்ள அடையாள அட்டைகளின் எண்ணிக்கையை தனித்தனியாக வழங்க திணைக்களம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, பழுதடைந்த அடையாள அட்டைகள் தொடர்பான எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான தகவல்கள் தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என தணிக்கை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...