18 9
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளின் சொகுசு வாகனங்களை அடுத்து வீடுகள்: வெளியான தகவல்

Share

அரசியல்வாதிகளின் சொகுசு வாகனங்களை அடுத்து வீடுகள்: வெளியான தகவல்

கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே குறித்த வீடுகளை காலி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கங்கள் அமைச்சர்களின் பாவனைக்காக கொழும்பு (Colombo) நகரில் வீடுகளை ஒதுக்கியிருந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் புதிய நடவடிக்கை ஏதாவது எடுக்கப்படலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்ற பின் முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய பல்வேறு சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காலி முகத்திடலில் கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், குறித்த வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபாலவும் (Ananda Vijaypala) கருத்து வெளியிட்டிருந்தார்.

பொதுமக்களின் சொத்துக்களைப் பாதுகாக்கவேண்டும் எனவும் முறை கேடாக பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து முழுமையான ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் வாகனங்களை வைத்து மக்களை ஏமாற்றாமல் அந்த வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) கடும் தொனியில் சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...