13 38
இலங்கைசெய்திகள்

வீட்டில் இருந்து வெளியேறத் தயார்! அறிவித்தார் மகிந்த

Share

வீட்டில் இருந்து வெளியேறத் தயார்! அறிவித்தார் மகிந்த

வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தவுடன் அதை விட்டு வெளியேறுவேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பாக இடம்பெற்று வரும் விவாதம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இந்த நாட்டின் குடிமகனாக, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லங்கள் அல்லது வசதிகள் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஏற்றுக்கொள்வது எனது பொறுப்பு.

இந்த வீட்டை காலி செய்ய நீங்கள் எனக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்கினால், அந்த திகதியில் நான் வெளியேறுவேன்.

ஆனால் இது மக்களுக்கானது. நான் மக்களின் பிரதிநிதியாக இந்த நாட்டு மக்களுக்கு நேர்மையாக சேவை செய்தேன்.

இந்த அரசாங்கம் மக்களால் நியமிக்கப்பட்டது. எனவே அரசாங்கம் ஒரு முடிவை எடுத்து என்னிடம் கூறியவுடன், நான் செல்வேன்.

நான் அதிகாரபூர்வமாக உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்கவில்லை. அதற்கு எந்த அவசியமும் இல்லை.

அரசாங்கம் என்னை வெளியேற செய்யச் சொல்லும் நாளில் நான் வெளியேறுவேன்.

நாட்டிற்காக பணத்தை பெற்றுக்கொள்ள இந்த வீட்டை 46 இலட்சத்திற்கு வாடகைக்கு விடுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

என்னைப் பற்றி எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு எனக்கு தகவல் தாருங்கள்.

ஊடகங்களிடம் கூறிய பிறகுதான் எனக்குத் தெரியவருகிறது” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...