tamilni 374 scaled
இலங்கைசெய்திகள்

திடீரென ஒவ்வாமை: ஒரு மாத குழந்தை பலி

Share

திடீரென ஒவ்வாமை: ஒரு மாத குழந்தை பலி

திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தலவத்துகொட தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு மாதம் மூன்று வாரங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிரிஹான பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் இருந்த குழந்தைக்கு உடலில் திடீரென நிறம் மாறி ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தலவத்துகொடையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

பின்னர், தலங்கம மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு, குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்திய அதிகாரி பி.எம்.டபிள்யூ. குமார பிரேத பரிசோதனை செய்து உடல் உறுப்புகளை அரசு மருத்துவனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும், முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் பிரேத பரிசோதனை வைத்திய அறிக்கையின் பிரகாரம், குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்காமல் திறந்த தீர்ப்பை வழங்குவதற்கு சமாதான நீதவான் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...