24 666087856a606
இந்தியாஇலங்கைசெய்திகள்

ஈழத்துக்காக எழுந்த குரல் இந்திய நாடாளுமன்றில்

Share

ஈழத்துக்காக எழுந்த குரல் இந்திய நாடாளுமன்றில்

இலங்கையில் உச்சக்கட்ட போர் நடைபெற்ற போது ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த தமிழக சட்டத்தரணி ஆர். சுதா (R. Sudha) இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்திய தேர்தலின் முடிவுகளின் நேற்றையதினம்(4) வெளியானதையடுத்து மயிலாடுதுறையில் அளிக்கப்பட்ட 10,88,182 வாக்குகளில் 5,18,459 வாக்குகளை பெற்று 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

குறித்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாபு 2,47,276 வாக்குகளையும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 1,66,271 வாக்குகளையும் நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 1,27,642 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஆர்.சுதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் வழக்கறிஞர் சுதா பங்குபற்றியிருந்தார்.

மேலும், அவர் இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற போது, காங்கிரஸுக்கு எதிராக குரல் எழுப்பியதோடு சோனியா காந்தியின் உருவபொம்மை எரிக்கும் போராட்டத்திலும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...