24 666087856a606
இந்தியாஇலங்கைசெய்திகள்

ஈழத்துக்காக எழுந்த குரல் இந்திய நாடாளுமன்றில்

Share

ஈழத்துக்காக எழுந்த குரல் இந்திய நாடாளுமன்றில்

இலங்கையில் உச்சக்கட்ட போர் நடைபெற்ற போது ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த தமிழக சட்டத்தரணி ஆர். சுதா (R. Sudha) இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்திய தேர்தலின் முடிவுகளின் நேற்றையதினம்(4) வெளியானதையடுத்து மயிலாடுதுறையில் அளிக்கப்பட்ட 10,88,182 வாக்குகளில் 5,18,459 வாக்குகளை பெற்று 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

குறித்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாபு 2,47,276 வாக்குகளையும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 1,66,271 வாக்குகளையும் நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 1,27,642 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஆர்.சுதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் வழக்கறிஞர் சுதா பங்குபற்றியிருந்தார்.

மேலும், அவர் இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற போது, காங்கிரஸுக்கு எதிராக குரல் எழுப்பியதோடு சோனியா காந்தியின் உருவபொம்மை எரிக்கும் போராட்டத்திலும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...