இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சமீபத்தில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் அவர்கள், பெருந்தோட்ட சமூகத்தின் நலனை மேம்படுத்தும் நோக்கில் பின்வரும் முக்கியக் கோரிக்கைகளை இந்திய நிதியமைச்சரிடம் முன்வைத்தார்:
இந்தியாவின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தின் கீழ் வருடாந்தம் இலங்கை மதிப்பில் 18 இலட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்குவதுபோல், LIC Lanka நிறுவனத்தின் ஊடாக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திப் பெருந்தோட்ட சமூகத்தை அதில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பெருந்தோட்ட சமூகத்தினர் OCI அட்டையைப் பெற்றுக் கொள்வதில் கடினமான வழிமுறைகள் இருப்பதால் அதைப் படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்காக, பிறப்புச் சான்றிதழில் ‘இந்திய வம்சாவளித் தமிழர்’ எனக் குறிப்பிடுவதன் மூலமாகவோ, அல்லது கண்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்தியாவில் இருந்து வந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளமையால் அவற்றை ஆய்வு செய்து OCI அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் மாணவர்களுக்கான 2,500 ரூபாய் புலமைப்பரிசிலின் தொகையை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.