16 28
இலங்கைசெய்திகள்

பாகிஸ்தான் நோயாளிக்கு இலங்கையில் சிகிச்சையளித்த இந்திய மருத்துவர்

Share

பாகிஸ்தான் நோயாளிக்கு இலங்கையில் சிகிச்சையளித்த இந்திய மருத்துவர்

பாகிஸ்தான் லாகூரின் பார்வையற்ற ஒருவருக்கு கொழும்பில் உள்ள கண் மருத்துவமனையில் மும்பையைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணர் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இது, தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பின் ஒரு தனித்துவமான நிகழ்வு வெளிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணரான குரேஸ் மஸ்கதியுடன் குறித்த பாகிஸ்தானியர் தொடர்பு கொண்டிருந்தபோதும், இந்திய மருத்துவ விசாவைப் பெற முடியாமல் போனதால் சிரமங்களுக்கு உள்ளானார்.

இந்தநிலையில் மாநாடு ஒன்றுக்காக கொழும்பு செல்ல திட்டமிட்டிருந்ததால், அங்குள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமத்திற்காக இலங்கை மருத்துவ சபையை அணுகியதாகவும், அதனை இலங்கை மருத்துவ சபை ஏற்றுக்கொண்டதாகவும் மருத்துவர் மஸ்கதி கூறியுள்ளார்.

இதனையடுத்து உள்ளூர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் குசும் ரத்நாயக்கவின் உதவியுடன், செப்டம்பர் 13 அன்று கொழும்பில் குறித்த பாகிஸ்தானியருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 48 மணித்தியால அறுவை சிகிச்சையின் பின்னர் நோயாளியின் பகுதி பார்வை மீளத்திரும்பியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1760409734 2952
செய்திகள்உலகம்

வர்த்தகப் போர் தணிவு: அமெரிக்கப் பொருட்களுக்கான 24% வரியை ஓராண்டுக்குத் தற்காலிகமாக நிறுத்தியது சீனா!

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் பதட்டங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக, அமெரிக்கப் பொருட்களுக்கான 24 சதவீத...

227670
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் விவாகரத்து அதிகரிப்பு: ‘4 லட்சம் தம்பதிகள் பிரிந்தனர்; சமூக ஊடக அடிமைத்தனம் ஆபத்து’ – அமைச்சர் எச்சரிக்கை!

இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 4 லட்சம் தம்பதிகள் விவாகரத்து செய்துள்ள நிலையில், திருமண...

aONVWpw1
செய்திகள்உலகம்

பயங்கரவாதத்தை தூண்டியதாகக் குற்றச்சாட்டு: சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் பங்களாதேஷ் நுழையத் தற்காலிகத் தடை!

பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாகப் பேசியதாகவும், நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளான சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர்...

23 645227426bdff
செய்திகள்அரசியல்இலங்கை

13வது திருத்தம் விவாதத்தை நிறுத்துங்கள்: சுயநிர்ணய உரிமைக்கு ஐ.நா. தீர்மானம் 1514-ன் கீழ் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் – அமெரிக்கத் தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பு!

இலங்கையின் காலனித்துவக் கட்டமைப்புக்குள் தமிழர்களைச் சிக்க வைக்கும் 13ஆவது திருத்தம், கூட்டாட்சி அல்லது நிர்வாக சபைகள்...