16 28
இலங்கைசெய்திகள்

பாகிஸ்தான் நோயாளிக்கு இலங்கையில் சிகிச்சையளித்த இந்திய மருத்துவர்

Share

பாகிஸ்தான் நோயாளிக்கு இலங்கையில் சிகிச்சையளித்த இந்திய மருத்துவர்

பாகிஸ்தான் லாகூரின் பார்வையற்ற ஒருவருக்கு கொழும்பில் உள்ள கண் மருத்துவமனையில் மும்பையைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணர் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இது, தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பின் ஒரு தனித்துவமான நிகழ்வு வெளிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணரான குரேஸ் மஸ்கதியுடன் குறித்த பாகிஸ்தானியர் தொடர்பு கொண்டிருந்தபோதும், இந்திய மருத்துவ விசாவைப் பெற முடியாமல் போனதால் சிரமங்களுக்கு உள்ளானார்.

இந்தநிலையில் மாநாடு ஒன்றுக்காக கொழும்பு செல்ல திட்டமிட்டிருந்ததால், அங்குள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமத்திற்காக இலங்கை மருத்துவ சபையை அணுகியதாகவும், அதனை இலங்கை மருத்துவ சபை ஏற்றுக்கொண்டதாகவும் மருத்துவர் மஸ்கதி கூறியுள்ளார்.

இதனையடுத்து உள்ளூர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் குசும் ரத்நாயக்கவின் உதவியுடன், செப்டம்பர் 13 அன்று கொழும்பில் குறித்த பாகிஸ்தானியருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 48 மணித்தியால அறுவை சிகிச்சையின் பின்னர் நோயாளியின் பகுதி பார்வை மீளத்திரும்பியுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...