24 668aafe8d46c9
இலங்கைசெய்திகள்பொழுதுபோக்கு

இரண்டாவது ரி 20 : இந்தியாவின் அதிரடியில் மண்கவ்வியது சிம்பாப்வே

Share

இரண்டாவது ரி 20 : இந்தியாவின் அதிரடியில் மண்கவ்வியது சிம்பாப்வே

சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ரி 20 போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தின் மூலம் இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

ஹராரேயில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 234 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அவர் 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து ஆட்டமிழந்தார். அத்துடன் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) 77 ஓட்டங்களையும்,ரிங்கு சிங்( Rinku Singh) 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பின்னர் 235 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சிம்பாப்வே அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Wessly Madhevere அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றதுடன், Luke Jongwe 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முகேஸ் குமார்(Mukesh Kumar)ஆவேஷ் கான்(Avesh Khan) இருவரும் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

நேற்றைய(06) தினம் இடம்பெற்ற முதலாவது ரி20 போட்டியில் சிம்பாப்வே 13 ஓட்டங்களால் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ரி 20 தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளன.

 

Share
தொடர்புடையது
d8a6a670 6a8c 11ee 883d 61bb9e676cae
உலகம்செய்திகள்

மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்; 34 பேர் பலி – ஐ.நா. கண்டனம்!

மியன்மாரில் ஆளும் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கிளர்ச்சியாளர்களின்...

1700821783 police officer arrested l
இலங்கைசெய்திகள்

ரூ. 5,000 லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜென்ட், கொன்ஸ்டபிள் கைது!

அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நேற்று (டிசம்பர் 11) காலை லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஒரு...

articles2F6kbj9SMxjiNxACRUcSNi
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மின்சாரம், நீர் கட்டணத்தில் 50% தள்ளுபடி கோரி ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் கடிதம்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக...

weather warning 1
இலங்கைசெய்திகள்

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றும் மழை நீடிக்கும்: திணைக்களம் அறிவிப்பு!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (டிசம்பர் 12) அவ்வப்போது...