tamilni 21 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தை கைவிடும் இலங்கை அரசாங்கம்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தை கைவிடும் இலங்கை அரசாங்கம்

கட்டுநாயக்க, மத்தள மற்றும் இரத்மலானை விமான நிலையங்களை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையங்களின் புறப்படும் முனையங்களை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 106 வீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 102,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்த போதிலும், நேற்று வரை 201,683 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு அனைவரும் ஒரே பாதையில் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 15,000 நட்சத்திர ஹோட்டல் அறைகள் மற்றும் 40,000 மற்ற ஹோட்டல் அறைகள் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2030ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை நான்கு மில்லியனாக உயர்த்தும் வகையில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போதுள்ள 49 சுற்றுலா வலயங்களை எதிர்காலத்தில் 64 ஆக அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் இலங்கைக்குள் இரண்டு விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...