24 660268411585b
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகளால் அதிகரித்துள்ள டொலர்

Share

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகளால் அதிகரித்துள்ள டொலர்

ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாட்டின் வர்த்தகச் சேவைகள் மற்றும் சுற்றுலாத்துறையின் வருமானம் கணிசமான அளவில் மீண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் இரண்டாவது நாணயக் கொள்கை மீளாய்வை வழங்குவதற்காக இன்று காலை (மார்ச் 26) கூட்டப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பின் போது, இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் எஸ். ஜெகஜீவன் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, ஜனவரி முதல் பெப்ரவரி வரையில் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக தொழிலாளர்களின் பணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இந்த மாதங்களில் சுற்றுலா வருவாய் 687 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, தொழிலாளர்களின் பணம் மற்றும் சுற்றுலா வருவாய் ஆகிய இரண்டும் 2022 ஐ விட கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.

மேலும், தொழிலாளர்களின் பணம் 2022 இல் 3.8 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2023 இல் 6 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

அத்தோடு, சுற்றுலா வருவாய் 2022 இல் 1.1 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2023 இல் 2.1 பில்லியன் டொலராக உயர்ந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...

25 67a81aa32df3b
செய்திகள்இலங்கை

பாடப்புத்தக அச்சிடும் பணி நிறுத்தப்படவில்லை – கல்வி அமைச்சு விளக்கம்!

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில...

20250908031349
செய்திகள்இலங்கை

“ஹரக் கட்டா”வின் பாதுகாப்பு செலவு மாதத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறையீடு!

பாதாள உலகத் தலைவரான நதுன் சிந்தக, ‘ஹரக் கட்டா’ என்றும் அழைக்கப்படுபவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

25 68f75f57333cd
செய்திகள்இலங்கை

ருஹுணு விவசாய பீட மோதல்: 21 மாணவர்கள் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ருஹுணு பல்கலைக்கழக விவசாய...