9 5
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முன்வைக்கப்பட்டுள்ள யோசனை

Share

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முன்வைக்கப்பட்டுள்ள யோசனை

தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ள வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்காவிட்டால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha de silva) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் இறக்குமதி மீண்டும் ஆரம்பித்தால், திறைசேறியினால் வரி வசூலிக்கப்படும் என்றும், எதிர்பார்த்தபடி ஊதியம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்திடம் கையளிக்கப்பட்ட திட்டத்தினால் வாகன இறக்குமதி மூலம் அறவிடப்படும் வரி மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி ஆரம்பத்தில் எதிர்பார்த்த மூன்று சதவீத பொருளாதார வளர்ச்சியை விட இந்த ஆண்டு ஒரு சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதால் திறைசேரிக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...