tamilnig 14 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

Share

இலங்கையின் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

இலங்கையின் நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் டிசம்பரில் 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.2 வீதமாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் டிசம்பரில் உணவுப் பொருட்களின் விலை 1.6 வீதத்தால் அதிகரித்துள்ளமையால் பணவீக்கம் இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், உணவு அல்லாத பொருட்களின் விலை நவம்பரில் 7.1 சதவீதத்தில் இருந்து டிசம்பரில் 6.3 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்பின் ஆதரவுடன், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பணவீக்கம் குறையத் தொடங்கியது, ஆனால் இந்த நிதியம் நிர்ணயித்த வருவாய் இலக்குகளை எதிர்கொள்ள இலங்கை பெறுமதி சேர் வரியை 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தியுள்ளதால், ஜனவரி முதல் பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும். ஜனவரி இறுதியில் பணவீக்கம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...