tamilnig 14 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

Share

இலங்கையின் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

இலங்கையின் நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் டிசம்பரில் 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.2 வீதமாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் டிசம்பரில் உணவுப் பொருட்களின் விலை 1.6 வீதத்தால் அதிகரித்துள்ளமையால் பணவீக்கம் இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், உணவு அல்லாத பொருட்களின் விலை நவம்பரில் 7.1 சதவீதத்தில் இருந்து டிசம்பரில் 6.3 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்பின் ஆதரவுடன், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பணவீக்கம் குறையத் தொடங்கியது, ஆனால் இந்த நிதியம் நிர்ணயித்த வருவாய் இலக்குகளை எதிர்கொள்ள இலங்கை பெறுமதி சேர் வரியை 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தியுள்ளதால், ஜனவரி முதல் பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும். ஜனவரி இறுதியில் பணவீக்கம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...