tamilnid 19 scaled
இலங்கைசெய்திகள்

பண்டிகை காலத்தில் மற்றுமொரு நெருக்கடி

Share

பண்டிகை காலத்தில் மற்றுமொரு நெருக்கடி

பண்டிகைக் காலத்தில் இனிப்பு வகைகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக இனிப்பு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை, அரிசி, தேங்காய், எண்ணெய் உள்ளிட்ட இனிப்பு வகைகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு நத்தார் பண்டிகையின் போது அதிகளவான இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு சடுதியாக விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, கொண்டை பலகாரம் 80 ரூபாய்,பயறு பலகாரம் 60 ரூபாய், இனிப்பு முறுக்கு 130 ரூபாய்,கொக்கீஸ் 130 ரூபாய், தேன் குழல் 60 ரூபாய், கேக் ஒரு கிலோ 1200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பண்டிகைக் காலங்களில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...