இலங்கைசெய்திகள்

இதுவரை 38 மரணங்கள்! நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

rtjy 264 scaled
Share

இதுவரை 38 மரணங்கள்! நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை 34 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (26.08.2023) வரை நாட்டில் மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,225 ஆக பதிவாகியுள்ளது.

ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஜூலை மாதத்தில் 7,369 டெங்கு நோயாளர்களும், ஆகஸ்ட் மாதத்தில் 4,536 டெங்கு நோயாளர்களுமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 13,053 என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 12,963 டெங்கு நோயாளர்களும், கண்டியில் 4,976 பேரும், களுத்துறையில் 3,949 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடத்தில் இதுவரை 38 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...