rtjy 214 scaled
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பேரிடியாக மாறவுள்ள மின் கட்டணம்!

Share

மக்களுக்கு பேரிடியாக மாறவுள்ள மின் கட்டணம்!

மூன்றாவது முறையாகவும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மின்சார சபை முன்வைக்கக் கூடாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”சட்டமூலங்களுக்கு அமைவாக வருடத்தில் இரண்டு முறை மட்டுமே மின் கட்டணத்தை அதிகரிக்க முடியும். மின் உற்பத்திக்கான செலவீனங்கள் குறைந்திருக்கின்றது.

ஒரு வருடத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை விடுப்பதானது சட்டவிரோத செயல்.

இந்த நடைமுறைக்கு அப்பால் மின் கட்டணத்தை 22 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது சட்டவிரோதமானது.

மின் கட்டண அதிகரிப்பிற்கான காரணங்களாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்திருக்கின்றது என்றும் மின் உற்பத்தி செலவு அதிகரித்திருக்கின்றது என்றும் மின்சார சபை கூறுகின்றது.

மின்சார கேள்வி அதிகரிப்பு தொடர்பான அறிக்கைகளை பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரியிருந்தது. தற்போது வரையில் அது கிடைக்கப்பெறவில்லை.

எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின்படி நீர் மின் உற்பத்திக்கு தேவையான நீர் வளம் இருக்கின்றது.

அதே நேரம் அணல் மின் உற்பத்திற்கு தேவையான மூலப்பொருட்களின் விலைகளும் உலக சந்தையில் குறைவடைந்துள்ளன.”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...