21 15
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் முன்மொழிவு: வரி திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

Share

ஜனாதிபதியின் முன்மொழிவு: வரி திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

வரி திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் பரிசீலிக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வருமானத்திற்கான வரிகளை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

இதன்படி, வரியற்ற வருமான வரம்பு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சத்து 50,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், தங்குமிட வரி விகிதங்களை 05 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்க ஜனாதிபதி முன்மொழிந்தார்.

இதேவேளை, அதிக வருமானம் பெறுவோருக்கு குறைந்த நிவாரணமும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அதிக நிவாரணமும் அளிக்கும் வகையில் வருமான வரியை திருத்தியமைப்பதில் தாம் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...