21 15
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் முன்மொழிவு: வரி திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

Share

ஜனாதிபதியின் முன்மொழிவு: வரி திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

வரி திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் பரிசீலிக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வருமானத்திற்கான வரிகளை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

இதன்படி, வரியற்ற வருமான வரம்பு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சத்து 50,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், தங்குமிட வரி விகிதங்களை 05 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்க ஜனாதிபதி முன்மொழிந்தார்.

இதேவேளை, அதிக வருமானம் பெறுவோருக்கு குறைந்த நிவாரணமும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அதிக நிவாரணமும் அளிக்கும் வகையில் வருமான வரியை திருத்தியமைப்பதில் தாம் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 11
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

24 670f93e6eb8ad
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது: வாகன முறைகேடு தொடர்பாக CID நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று (30) கைது...

25 6949732ef2e8e
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல்: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்!

‘டித்வா’ (Titli) புயல் அனர்த்தத்தின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொதுமக்களின்...

images 1 9
செய்திகள்அரசியல்இலங்கை

மாணிக்கக்கல் ஏற்றுமதியில் பாரிய வருமான இழப்பு: சட்டவிரோதப் போக்கைக் கட்டுப்படுத்த புதிய வரி நடைமுறை!

இலங்கையில் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையில் நிலவும் நிருவாகச் சிக்கல்கள் காரணமாக, நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய...