IMG 20230405 WA0033
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தினால்பனை உற்பத்தி சார் வாழ்வாதார உதவித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

Share
இந்தியாவின், ஓசூர் சிப்ஹொட் றோட்டறிக் கழகத்தின் “இலங்கைத் தமிழ் உறவுகளுக்கான வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டத்தின்” ஒரு அங்கமாக, யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பனை உற்பத்தி சார் வாழ்வாதார உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
றோட்டறி மாவட்டம் 2982 இன் முன்னாள் உதவி ஆளுநர் றொட்டேரியன் சரவணன் தலைமையில் நாவற்குழியில் அமைந்துள்ள நெய்தல் கடற்கரை நகரின் கருத்தரங்கு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நாவற்குழிப் பகுதில் உள்ள கீழ் உழைப்புக் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பனை சார் உற்பத்திகள் மற்றும் கைவினைப் பொருள்களின் உற்பத்தி தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. பயிற்சிக்காலத்தில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைப்படியாக மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதுடன் உற்பத்திப் பொருள்களுக்கான மூலதன உதவியும் வழங்கப்படவுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பயிற்சியின் பின்னர் பயனாளிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் முழுமையாக கொள்வனவு செய்து சந்தைப்படுத்தும் வசதியும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதற்கான நிதி அனுசரணை ஓசூர் சிப்ஹொட் றோட்டறிக் கழகத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்றிட்டத்தின் முதல் அணி பயிற்சியை முடித்துக் கொண்ட பின்னர் தொடர்ந்தும் பயனாளிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த அறிமுக நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தலைமைத் தூதரக அதிகாரியும், பிரதித் துணைத் தூதுவருமான ராம் மகேஷும் விருந்தினர்களாக கைதடியில் அமைந்துள்ள  பனை ஆராய்சி நிறுவனத்தின் முகாமையாளர் பி. விஜியேந்திரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பதிவாளர் வி. காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், இந்தியாவின் றோட்டறி மாவட்டம் 2982 இன் உதவி ஆளுநர் றொட்டேறியன் பி. தக்‌ஷாயினி, ஓசூர் சிப்ஹொட் றோட்டறிக் கழகத்தின் தலைவர் றொட்டேறியன் ரி. வி. முருகன் மற்றும் செயற்றிட்ட அனுசரணையாளர்களான ஓசூர் சிப்ஹொட் றோட்டறிக் கழக உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினரும், யாழ்பாணம் றோட்டறிக் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...