1 24
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் பெருந்தொகை சம்பளத்துடன் வேலைவாய்ப்பு: வெளியான அறிவிப்பு

Share

வெளிநாட்டில் பெருந்தொகை சம்பளத்துடன் வேலைவாய்ப்பு: வெளியான அறிவிப்பு

இஸ்ரேலில் நிர்மாணத் துறையில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஆட்சேர்ப்புக்கான முன்னோடி பரீட்சைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதுவரை1500 இற்கும் அதிகமானோர் தொழில்களில் இணைந்து சம்பளம் பெறவுள்ளதாகவும், பரீட்சைகளுக்காக ஏற்கனவே பெருமளவானோர் வருகை தருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கட்டுமானத்துறையில் 25-44 வயதுக்குட்பட்ட அனுபவமுள்ள ஆண் தொழிலாளர்கள் பரீட்சைகளில் நேரடியாக பங்குபற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேலைகள் தொடர்பான நேர்முக பரீட்சை ஆகஸ்ட் 15 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் மொரட்டுவ கடுபெத்தவில் உள்ள NAITA இன்ஸ்டிட்யூட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரீட்சை நுழைவுக்கட்டணமாக 6000 ரூபாய் அறவிடப்படும் எனவும், விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள், கடவுச்சீட்டுடன் வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
379161 crime 02 1
செய்திகள்இலங்கை

வாள்வெட்டு, போதைப்பொருள் கடத்தல்: சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு!

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்த எட்டுப் பேருக்கு...

Kajen
செய்திகள்இலங்கை

“வடக்கு-கிழக்கில் போதைப்பொருள் பரவலுக்கு இராணுவமே காரணம்”: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போதைப்பொருளைப் பரப்புவதில் இராணுவத்தினருக்குப் பெரும் பங்கு உள்ளது எனத் தமிழ்த்...

25 68fb1c1d6b80d
செய்திகள்இலங்கை

லசந்த விக்ரமசேகர மரணம்: தலையில் மற்றும் மார்பில் பலத்த காயம் – சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு உறுதி!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் மரணத்திற்கான காரணம், துப்பாக்கிச் சூட்டினால் தலை மற்றும்...

25 68fb0fa27ab98
செய்திகள்இலங்கை

2 கோடிக்கு மேல் மோசடி: கொழும்பு புறக்கோட்டை நிறுவனத்தில் திட்டம் தீட்டிப் பணத்தைக் கையாடிய பெண் உட்பட 8 பேர் கைது!

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான...