24 663c1a49940f7
இலங்கைசெய்திகள்

போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை

Share

போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை

ஜனவரி 1, 2023 மற்றும் டிசம்பர் 25, 2023 க்கு இடையில் 1,769 போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மே மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட 1,769 போலி நாணயத்தாள்கள் 11 நீதிமன்ற வழக்குகளுக்காக இலங்கை மத்திய வங்கி நீதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.

இலங்கையில் ஒரு மில்லியன் நாணயத் தாள்களுக்கு சுமார் 1.4 போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இது ஒரு மில்லியன் நாணயத் தாள்களுக்கு 15 போலி நாணயத் தாள்கள் என்ற உலகளாவிய சராசரி வீதத்துடன் ஒப்பிடும் போது கணிசமான குறைவாகும்.

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 57 ஆவது பிரிவின் கீழ், நீதித்துறை நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், போலி நாணயத் தாள்களைப் பின்பற்றுவது தொடர்பான தீர்க்கமான ஆதாரமாக மத்திய வங்கி 97 சான்றிதழ்களை வழங்கியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, புழக்கத்தில் உள்ள பணத்தின் தரத்தை பேணுவதற்காக போலி நாணயத்தாள்களை கண்டறிவது பற்றிய அறிவை மேம்படுத்தும் வகையில், இலங்கை மத்திய வங்கி இதுவரை பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு சுமார் 25 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...