9 4
இலங்கைசெய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவுறுத்தல்

Share

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவுறுத்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்யாதவர்கள் கட்டுப்பணத்தை செலுத்தும் சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மூலம் விளம்பரம் பெறும் நோக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறு பலர் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே பல்வேறு காரணங்களை முன்வைத்து அநாவசியமாக தேர்தலில் ஈடுவதினை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நாட்டின் அரசியல் தொடர்பில் எவ்வித தொலைநோக்குப் பார்வையும் இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தேர்தலுக்காக செலவிடப்படும் பணத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...