வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு அறிவுறுத்தல்
இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு அறிவுறுத்தல்

Share

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு அறிவுறுத்தல்

வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் போலந்தில் வேலை வாய்ப்பை வழங்குவதாக கூறி பொது மக்களிடமிருந்து 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகத்தில் பதிவு செய்யாமல் கொழும்பு -05 இல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை நடத்தி வந்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 55 வயதுடைய வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே வெளிநாடு செல்ல காத்திருப்போர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 671f70baa30ee
உலகம்செய்திகள்

ஜேர்மனி பயண ஆலோசனை புதுப்பிப்பு: இலங்கை உட்பட ஆறு நாடுகளுக்கு எச்சரிக்கை!

இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான பயண ஆலோசனைகளை ஜேர்மன் புதுப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கனடா, பிரான்ஸ்,...

download
செய்திகள்உலகம்

நூற்றாண்டு கால இரகசியம்: முதல் உலகப் போர் வீரர்களால் கடலில் வீசப்பட்ட கடிதம் ஆஸ்திரேலிய கடற்கரையில் மீட்பு

மேற்கு அவுஸ்திரேலியாவின் எஸ்பரன்ஸ் பகுதியில் உள்ள வார்டன் கடற்கரையில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் புதைந்திருந்த ஒரு...

pregnancy 2 2024 09 778bfd6d1c1bc7106948a179ec619652
இலங்கைசெய்திகள்

பெண்கள் 51.7% – 15 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கை குறைவு!

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையில் பாலினப் பங்கீடு மற்றும்...

33 8 696x392 1
இலங்கைசெய்திகள்

பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தேசம்: அடிப்படை உரிமை மனு நாளை விசாரணைக்கு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களை, மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில்...