28 16
இலங்கைசெய்திகள்

திடீரென உயிரிழந்த பேருந்து சாரதி: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

Share

திடீரென உயிரிழந்த பேருந்து சாரதி: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபையின் 40 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களிடமிருந்து மருத்துவ அறிக்கைகளை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இந்த மருத்துவ அறிக்கைகள் பெறப்படும் என இலங்கை போக்குவரத்து சபை மேலும் குறிப்பிடடுள்ளது.

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த அரச பேருந்தின் சாரதி ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக (23 ஆம் திகதி) இரவு 8.15 மணியளவில் உயிரிழந்திருந்தார்.

இதன்போது பேருந்து வீதியை விட்டு விலகி பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு மாத்திரம் லேசான காயம் ஏற்பட்டிருந்ததுடன், விபத்து ஏற்படும் போது பேருந்தில் 40 பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான விபத்து சம்பவங்கள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை இந்த விசேட தீர்மானத்தினை எடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...