17 8
இலங்கைசெய்திகள்

அரச வாகனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Share

அரச வாகனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் திருட்டு அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் தகவல் தெரிவிக்க புதிய துரித அழைப்பு இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபரினால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் திருட்டு அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அவதானிக்கும் பொது மக்கள் 1997 என்ற துரித இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச அதிகாரிகள் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களை முறையாக பராமரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்களில் வாகனங்களை மாற்றுவதற்குப் பதிலாக, அவற்றைப் பராமரிப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...