tamilni 298 scaled
இலங்கைசெய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Share

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

விவசாயத்துறைக்குள் இளைஞர்களை ஈர்க்கும் நோக்கில், ஆயிரம் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்கி, ஏற்றுமதி சார்ந்த பயிர்களுக்கு வழிகாட்ட விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதற்கமைய, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 3000 மில்லியன் ரூபாவில் 1000 மில்லியன் ரூபாவை இதற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது குறித்து பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, நெல், சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு ஆகிய நான்கு பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

அந்த பயிர்களுக்கு மேலதிகமாக, தற்போது சர்வதேச அளவில் தேவையுள்ள பயிர்களை பயிரிட ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...