tamilni 298 scaled
இலங்கைசெய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Share

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

விவசாயத்துறைக்குள் இளைஞர்களை ஈர்க்கும் நோக்கில், ஆயிரம் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்கி, ஏற்றுமதி சார்ந்த பயிர்களுக்கு வழிகாட்ட விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதற்கமைய, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 3000 மில்லியன் ரூபாவில் 1000 மில்லியன் ரூபாவை இதற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது குறித்து பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, நெல், சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு ஆகிய நான்கு பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

அந்த பயிர்களுக்கு மேலதிகமாக, தற்போது சர்வதேச அளவில் தேவையுள்ள பயிர்களை பயிரிட ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...