24
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!

Share

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!

கடந்த சில நாட்களாகப் தொடர்ந்த வெள்ள நிலைமை தணிந்து வருகின்ற போதிலும், தொற்று அல்லாத நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதாரத் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், வெள்ளம் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் ஊற்று நீரை பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஊற்று அல்லது கிணற்று நீரை பயன்படுத்தும் போது பொது சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவது அவசியம் எனவும் நன்கு கொதித்தாறிய நீரை பருக வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வயிற்றுப்போக்கு, டெங்கு, எலிக்காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் இந்தக் காலத்தில் அதிகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்,தொற்று மற்றும் தொற்றாத நோய்களில் இருந்து சிறு குழந்தைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கொழும்பு, லேடி ரிஸ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் டொக்டர் டிபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...