இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!

Share
24
Share

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!

கடந்த சில நாட்களாகப் தொடர்ந்த வெள்ள நிலைமை தணிந்து வருகின்ற போதிலும், தொற்று அல்லாத நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதாரத் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், வெள்ளம் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் ஊற்று நீரை பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஊற்று அல்லது கிணற்று நீரை பயன்படுத்தும் போது பொது சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவது அவசியம் எனவும் நன்கு கொதித்தாறிய நீரை பருக வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வயிற்றுப்போக்கு, டெங்கு, எலிக்காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் இந்தக் காலத்தில் அதிகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்,தொற்று மற்றும் தொற்றாத நோய்களில் இருந்து சிறு குழந்தைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கொழும்பு, லேடி ரிஸ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் டொக்டர் டிபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...