24
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!

Share

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!

கடந்த சில நாட்களாகப் தொடர்ந்த வெள்ள நிலைமை தணிந்து வருகின்ற போதிலும், தொற்று அல்லாத நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதாரத் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், வெள்ளம் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் ஊற்று நீரை பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஊற்று அல்லது கிணற்று நீரை பயன்படுத்தும் போது பொது சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவது அவசியம் எனவும் நன்கு கொதித்தாறிய நீரை பருக வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வயிற்றுப்போக்கு, டெங்கு, எலிக்காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் இந்தக் காலத்தில் அதிகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்,தொற்று மற்றும் தொற்றாத நோய்களில் இருந்து சிறு குழந்தைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கொழும்பு, லேடி ரிஸ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் டொக்டர் டிபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...