24 65fe24b547b7b
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வேகமாக பரவும் தொற்றுநோய்

Share

இலங்கையில் வேகமாக பரவும் தொற்றுநோய்

“டினியா” எனப்படும் தோல் நிலை படிப்படியாக தொற்றுநோய் வடிவத்தில் உருவாகி வருவதாக தோல் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த தொற்றுநோய் வயது வித்தியாசமின்றி அனைத்து மக்களிடமும் பரவுவதாகவும், பெரும்பாலும் வியர்வை உள்ள இடங்களிலும், தலையைச் சுற்றியும் ஏற்படும் தன்மை இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் விசேட வைத்தியர் ஜனக அகரவிட்ட, விசேட வைத்தியர் இந்திக கரவிட்ட உள்ளிட்ட வைத்தியர்கள் பலரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன், மக்களுக்கு மேலும் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

இந்த நோய் தொற்று நிலை சொறி போல் தோன்றுவதாகவும், அரிப்பு முதன்மை அறிகுறியாக இருப்பதாகவும் வைத்தியக்குழு கூறியுள்ளது.

பொது கழிப்பறைகளை பயன்படுத்தும் போது தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த “டினியா” வகை தொற்று நோய் தற்போது வேறுபட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள ஒருவருக்கு இதுபோன்ற நோய் கண்டறியப்பட்டால், துணிகளை தனி தனியாக வெந்நீரைப் பயன்படுத்தி துவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பூஞ்சை வெப்பநிலையால் அழிக்கப்படும் என்றும், நாட்டில் இந்நோய்க்கு ஏற்ற 10 வகைக்கும் குறைவான மருந்துகளே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நோய் தொற்றுக்கு வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் மருந்து பயன்படுத்த கூடாது எனவும் வைத்தியக்குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...