tamilni 504 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Share

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் மோதல்களினால் ஏற்படும் விபத்துக்கள் முகம் சிதைவதற்கு முக்கிய காரணம் எனவும், வாய் புற்று நோயினால் முகம் சிதைவு ஏற்படுவதாகவும் கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஏ. எச்.எம்.கே. அபேசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தந்தையின் முகம் இதயத்திற்கு மகிழ்ச்சி, முக குறைபாடுகளை மீட்டெடுக்கலாம்’ என்ற தலைப்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் இந்த விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பிறப்பு மற்றும் பாலுறவு மூலம் பரவும் வைரஸ்களாலும் முக குறைபாடுகள் ஏற்படுவதாகவும், விலங்குகள் கடித்தல் மற்றும் தாக்குதலால் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த குறைபாடுகளை மிக நுட்பமான முறையில் மீட்டெடுக்கும் அனைத்து வசதிகளும் நம் நாட்டு அரச வைத்தியசாலைகளில் இருப்பதாகவும், அதற்காக அரசு பெருமளவு பணம் செலவழிப்பதாகவும் வைத்தியர் கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...