32 4
இலங்கைசெய்திகள்

இரவில் இருமல் வந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்: வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்

Share

இரவில் இருமல் வந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்: வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்

தற்போது நிலவும் குளிர் காலநிலையுடன் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிபுணர், கடந்த சில நாட்களாக ‘இன்புளுவன்சா’ நோயாளர்களின் அதிகரிப்பும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவை இருந்தால் வைரஸ் காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களிடம் மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த அறிகுறிகள் இருந்தால் முகமூடி அணிவது பொருத்தமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளுக்கு இரவில் இருமல் வந்தால், நிமோனியா ஏற்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும் சுகாதாரத்துறையினர் வலியுறுத்துகின்றனர்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...