24 4
இலங்கைசெய்திகள்

டோக் குரங்கு பயங்கரவாதம்: விவசாயிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Share

டோக் குரங்கு பயங்கரவாதம்: விவசாயிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

விவசாயிகளுக்கு தங்கள் பயிர்ச்செய்கை நிலங்களில் வன விலங்குகளால் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த (K. D. Lalkantha) அறிவித்துள்ளார்.

காட்டு விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவது, குறிப்பாக டோக் குரங்குகளால் சேதப்படுத்தப்படுவது ஒரு தீவிரமான பிரச்சினையாக உள்ளதால் அதனை சிலர் “டோக் குரங்கு பயங்கரவாதம்” என்றும் அழைப்பதாகவும் அவர் நாடாளுமன்றில் கூறியுள்ளார்.

அத்தோடு, வன விலங்குகளால் ஏற்படும் சேதங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பிரச்சினையாக இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, விவசாயிகள் தங்கள் பயிரிடப்பட்ட நிலத்தில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என்றும் அதற்கு எந்த சட்ட சிக்கல்களும் இல்லை அமைச்சர் அறிவித்துள்ளார்.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், நீண்ட காலம் செல்வதற்கு முன்னரே அது தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...