24 4
இலங்கைசெய்திகள்

டோக் குரங்கு பயங்கரவாதம்: விவசாயிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Share

டோக் குரங்கு பயங்கரவாதம்: விவசாயிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

விவசாயிகளுக்கு தங்கள் பயிர்ச்செய்கை நிலங்களில் வன விலங்குகளால் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த (K. D. Lalkantha) அறிவித்துள்ளார்.

காட்டு விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவது, குறிப்பாக டோக் குரங்குகளால் சேதப்படுத்தப்படுவது ஒரு தீவிரமான பிரச்சினையாக உள்ளதால் அதனை சிலர் “டோக் குரங்கு பயங்கரவாதம்” என்றும் அழைப்பதாகவும் அவர் நாடாளுமன்றில் கூறியுள்ளார்.

அத்தோடு, வன விலங்குகளால் ஏற்படும் சேதங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பிரச்சினையாக இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, விவசாயிகள் தங்கள் பயிரிடப்பட்ட நிலத்தில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என்றும் அதற்கு எந்த சட்ட சிக்கல்களும் இல்லை அமைச்சர் அறிவித்துள்ளார்.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், நீண்ட காலம் செல்வதற்கு முன்னரே அது தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...