tamilni 48 scaled
இலங்கைசெய்திகள்

பரீட்சைகள் பிற்போடப்படும் அபாயம்

Share

பரீட்சைகள் பிற்போடப்படும் அபாயம்

உயர்தர விடைத்தாள் பரீட்சை தாமதமானால் இவ்வருடம் நடைபெறவுள்ள அனைத்துப் பரீட்சைகளும் பிற்போடப்படும் அபாயம் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய கல்வி அமைப்பை சீர்குலைக்கும் ஒரு சிறிய சம்பவம் கூட பாடசாலை அமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளினால் பரீட்சை காலம் மாத்திரமன்றி பாடசாலைகளின் முழு செயற்பாடுகளும் தடைபடுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியமையால் இந்தச் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு்ளார்.

இம்முறை வழங்கப்பட்ட நாளாந்த கொடுப்பனவு தொடர்பில் நிலவும் பிரச்சினையின் அடிப்படையிலேயே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டைப் போலவே, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை எவ்வித பிரச்சினையும் இன்றி வழங்கப்படும் என கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 173
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வேசும முதற்கட்ட பயனாளர்களுக்கு கொடுப்பனவு: மோசடியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை!

அஸ்வேசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்ட பயனாளர்களுக்கான விபரங்களை மீளாய்வு செய்யும் பணிகள் நிறைவடைந்த பின்னர், எதிர்வரும்...

world 172
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் கண்டியில் அரச எண்ணெய் பூசும் விழா இனிதே நடைபெற்றது!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் முக்கிய பாரம்பரிய சடங்கான ‘அரச எண்ணெய் பூசும் விழா’, ஜனாதிபதி...

world 171
செய்திகள்இலங்கைபிராந்தியம்

CID விசாரணையின் கீழ் லங்கா நிலக்கரி நிறுவன அலுவலகம் இன்று மீண்டும் திறப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 11) முத்திரையிடப்பட்ட லங்கா நிலக்கரி நிறுவனத்தின்...

world 170
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னோக்கிச் செல்வோம்: நாமல் ராஜபக்ச அழைப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்காலை, கால்டன் ஹவுஸில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்ற...