tamilni 302 scaled
இலங்கைசெய்திகள்

செயற்கை முட்டை விற்பனை: மக்களிடம் வேண்டுகோள்

Share

செயற்கை முட்டை விற்பனை: மக்களிடம் வேண்டுகோள்

நாட்டில் செயற்கை முட்டைகள் பாவனைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானது நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் போலியான செயற்கை முட்டைகளை விற்பனை செய்ய முடியாது எனவும், அவற்றை உணவுக்காகவும் பயன்படுத்த முடியாது எனவும் சபை குறிப்பிட்டுள்ளது.

எனவே, அச்சமின்றி முட்டைகளை உட்கொள்ளுமாறும் நுகர்வோர் சேவை அதிகாரசபை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், போலி பிளாஸ்டிக் அரிசி பரவுவது போன்று இந்த பொய்யான செய்தியும் பரப்பப்பட்டு வருவதாக நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அவ்வாறான முறைகேடுகள் நடந்தால் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் சேவை அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...