4 5
இலங்கைசெய்திகள்

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட அனுமதி

Share

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட அனுமதி

நாட்டில் தற்போது அரிசி(rice) பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் கட்டுப்பாட்டு அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்ம் அனுமதி வழங்கியுள்ளது.

இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு டிசம்பர் 20 ஆம் திகதி வரை அனுமதியளிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாடு மற்றும் அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்திற் கொண்டு அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் தற்காலிகமாக நீக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரையில், இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப் பத்திரங்களைப் பெறாமல் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
07 5
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு வான்பரப்பு மூடல்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 12 விமான சேவைகளை ரத்து செய்தது!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன்...

06 4
செய்திகள்உலகம்

ஈரான் எல்லையில் அதிரடி: ஊடுருவல் முயற்சியைத் தடுத்ததாக IRGC அறிவிப்பு!

ஈரானின் மேற்கு எல்லைப் பகுதியினூடாக ஊடுருவித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த பிரிவினைவாதக் குழுக்கள் மீது, ஈரான்...

05 4
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு பதற்றம்: அவுஸ்திரேலியா தனது இராணுவ விமானங்களை அனுப்பி வைத்தது!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா தனது...

04 4
செய்திகள்இலங்கை

உணவுப் பொதிகளில் கடத்தப்பட்ட 53.6 கோடி போதைப்பொருள்: மலேசியாவிலிருந்து வந்த பார்சல்கள் சிக்கின!

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட சுமார் 536 மில்லியன் ரூபா (53.6...