tamilni 228 scaled
இலங்கைசெய்திகள்

ஒரே இரவில் ரூபாவின் பெறுமதியில் மாற்றம்?

Share

ஒரே இரவில் ரூபாவின் பெறுமதியில் மாற்றம்?

இப்போது இருக்கின்ற இந்த சூழ்நிலையை பார்க்கின்ற போது நாட்டுக்குள்ளே போதிய அளவு டொலர் உள்வருகை ஏற்படாவிட்டால் இறக்குமதிகளை ஏதோ ஒரு வகையிலே கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்காலத்தில் இலங்கை ரூபாவுக்கு எதிராக பல வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி அதிகரிக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனினும், மத்திய வங்கி அவ்வாறு அதிகரிப்பதை தடுக்கக் கூடிய சாத்தியங்களும் உண்டு.

ஆரம்பத்தில் பிரச்சினைகள் அதிகரித்திருந்த காலப்பகுதியில், இலங்கை மத்திய வங்கி ரூபாவினுடைய பெறுமதியை நிலையான மட்டத்திலே பேணி வந்தது. பிறகு திடீரென்று ஒரே தடவையிலே அதனை நீக்கிக் கொண்டபடியால்தான் இலங்கை ரூபாவின் பெறுமதி, டொலர் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக திடீரென்று குறைவடையத் தொடங்கியது.

இந்தமுறை அந்த தவறை விட மாட்டார்கள். மாறாக இவ்வாறு டொலர் சந்தையில் குறைவாக வந்து கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் இலங்கை ரூபாவை தேய்வடைய அனுமதிப்பார்கள்.

அவ்வாறு அனுமதிப்பதன் மூலமாக இலங்கை ரூபாவினுடைய பெறுமதி சிறிது சிறிதாக குறைவடையக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு. ஆரம்பத்தில் நடந்தது போன்று ஒரே இரவிலே அது மிகப்பெரிய அளவிலே தேய்வடையக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை.

ஆனால் இப்போது இருக்கின்ற இந்த சூழ்நிலையை பார்க்கின்ற போது நாட்டுக்குள்ளே போதிய அளவு டொலர் உள்வருகை ஏற்படாவிட்டால் இறக்குமதிகளை ஏதோ ஒரு வகையிலே கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அதேபோல, இந்த எரிபொருள் கோட்டா போன்றவற்றை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.

என்னைப் பொறுத்தவரையில், டொலரினுடைய பெறுமதி ஆரம்பத்தில் நிகழ்ந்தது போல ஒரேநேரத்தில் மிகப் பெரிய அளவில் உயர்வதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே கருதுகின்றேன் என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...