24 6608c6dd936eb
இலங்கைசெய்திகள்

ஆடை இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

Share

ஆடை இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

இந்த வருடம் (2024) ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை தொழிற்சாலைகளுக்கான உபகரணங்களின் இறக்குமதிக்காக 470.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2023) ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில், ஆடை மற்றும் ஆடை தொழிற்சாலைகளுக்கான பாகங்கள் இறக்குமதிக்காக 383.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை துணைப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 87.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 22.7 சதவீதம் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மட்டும் ஆடை மற்றும் ஆடை உபகரணங்களை இறக்குமதி செய்ய செலவிடப்பட்ட தொகை 246.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள புத்தாண்டு காரணமாக இவ்வாறு ஆடை இறக்குமதி அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
download
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் கடலில் பெரும் போதைப்பொருள் வேட்டை! – 50 கிலோ ‘ஹஷிஷ்’ பறிமுதல்; இருவர் கைது!

மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 50...

1698224062 NAMAL MEDIA 6 696x487 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலயவின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி? – ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோருகிறார் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு நிலவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உருவான ‘அரகலய’ (மக்களின் போராட்டம்) மற்றும்...

ms dhoni 2012 1200 1726388754
விளையாட்டுசெய்திகள்

தோனியின் பதவி விலகல் சொந்த முடிவு அல்ல? – பிசிசிஐ கொடுத்த அழுத்தம் குறித்து அம்பலமான உண்மை!

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாகக் கருதப்படும் எம்.எஸ். தோனி, 2017-ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும்...

1739372035 images 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் வரம்: e-BMD திட்டத்தின் கீழ் ஒரே ஆண்டில் 8,027 பேர் பயன்!

இலங்கை அரசாங்கத்தின் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட...