14 20
இலங்கைசெய்திகள்

வரி விலக்குகள் காரணமாக திறைசேரிக்கு டிரில்லியன்களில் நட்டம்

Share

வரி விலக்குகள் காரணமாக திறைசேரிக்கு டிரில்லியன்களில் நட்டம்

வரி விலக்குகள் காரணமாக திறைசேரிக்கு 2 டிரில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முக்கிய வருமான நிறுவனங்களான உள்நாட்டு வருமான வரி திணைக்களம், சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பன வருடத்தின் முதல் அரையாண்டில் 1,680.2 பில்லியன் ரூபாய்களை வசூலித்துள்ளன.

இது எதிர்பார்த்த வருவாயில் 44 சதவீதத்தை ஈடு செய்துள்ளது. இருப்பினும், மொத்தம் 978 பில்லியன் ரூபாய் வரி விலக்குகள் காரணமாக திறைசேரிக்கு இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, வரிகளை வசூலிக்கும் முயற்சியில் வரி செலுத்தாதவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு உள்நாட்டு வருமான வரித்திணைக்களம், சுமார் 900 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள வரி செலுத்துவோர் சுமார் 13 மில்லியன் பேர் இருந்தாலும், 5 மில்லியன் பேருக்கு மட்டுமே வரி அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள தகுதியுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் அடையாள எண்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...