14 20
இலங்கைசெய்திகள்

வரி விலக்குகள் காரணமாக திறைசேரிக்கு டிரில்லியன்களில் நட்டம்

Share

வரி விலக்குகள் காரணமாக திறைசேரிக்கு டிரில்லியன்களில் நட்டம்

வரி விலக்குகள் காரணமாக திறைசேரிக்கு 2 டிரில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முக்கிய வருமான நிறுவனங்களான உள்நாட்டு வருமான வரி திணைக்களம், சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பன வருடத்தின் முதல் அரையாண்டில் 1,680.2 பில்லியன் ரூபாய்களை வசூலித்துள்ளன.

இது எதிர்பார்த்த வருவாயில் 44 சதவீதத்தை ஈடு செய்துள்ளது. இருப்பினும், மொத்தம் 978 பில்லியன் ரூபாய் வரி விலக்குகள் காரணமாக திறைசேரிக்கு இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, வரிகளை வசூலிக்கும் முயற்சியில் வரி செலுத்தாதவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு உள்நாட்டு வருமான வரித்திணைக்களம், சுமார் 900 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள வரி செலுத்துவோர் சுமார் 13 மில்லியன் பேர் இருந்தாலும், 5 மில்லியன் பேருக்கு மட்டுமே வரி அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள தகுதியுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் அடையாள எண்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...