28 6
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டுகளுக்கான நெருக்கடி: குடிவரவு கட்டுப்பாட்டாளர் போலந்து பயணம்

Share

கடவுச்சீட்டுகளுக்கான நெருக்கடி: குடிவரவு கட்டுப்பாட்டாளர் போலந்து பயணம்

கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குடிவரவு கட்டுப்பாட்டாளர் மற்றும் துணைக் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் போலந்து நிறுவனத்துடன் பேச்சு நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டுக்களின் தயாரிப்பை துரிதப்படுத்துவதற்காகவே அவர்கள் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய இணையக்கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் பொறுப்பு எம்ஆர்பிகள் தேல்ஸ் டிஐஎஸ் ஃபின்லாந்து ( Thales DIS Finland Oy)என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தயாரிப்புக்கள் கால தாமதமாவதால், இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

வெற்றுக்கடவுச்சீட்டுகள் இல்லாமையே இந்த நிலைமைக்கான காரணமாகும்.

இந்தநிலையில் புதிய இ-கடவுச்சீட்டுகள் 2024 அக்டோபர் மாத இறுதியில் இலங்கைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அவை ஏற்கனவே பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுக்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும் மற்றும் பிற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...