9 4
இலங்கைசெய்திகள்

இலங்கையின் தொழிற்சங்கங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கை

Share

இந்த ஆண்டு பாதீட்டில் அரச ஊழியர்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட்டதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தங்கள், அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் பலவீனமான பொருளாதார மீட்சி தடைப்படக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம், இன்று (4) எச்சரித்துள்ளது.

அநுர குமார திசாநாயக்கவின் முதல் பாதீடு, பொதுத்துறை சம்பளத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், நாட்டின் நலிந்த நிதிகளை சரிசெய்யும் முயற்சியாக நீண்டகால சலுகைகளில் ஆழமான குறைப்புக்களையும் செய்துள்ளது.

இந்தநிலையில், இலங்கையின் முக்கிய மருத்துவர்கள் சங்கம் தங்கள் கொடுப்பனவுகளில் குறைப்புக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை முதல் பணி நிறுத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஆசிரியர்களும் பணி நிறுத்தங்களை பரிசீலித்து வருகின்றனர். எனினும், இலங்கையின் சிக்கனத் திட்டத்திற்கான “கடைசி பெரிய உந்துதல்” இந்த பாதீடு என்றும், அதன்பிறகு, முன்னோக்கிச் செல்வது மிகவும் எளிதாக இருக்கும் என்றும், சர்வதேச நாணய நிதிய குழுத் தலைவர் பீட்டர் ப்ரூயர் கூறியுள்ளார்.

அத்துடன் தியாகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர், சீர்திருத்தங்களுடன் இணைந்து கொள்வது, இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழி” என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...