9 4
இலங்கைசெய்திகள்

இலங்கையின் தொழிற்சங்கங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கை

Share

இந்த ஆண்டு பாதீட்டில் அரச ஊழியர்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட்டதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தங்கள், அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் பலவீனமான பொருளாதார மீட்சி தடைப்படக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம், இன்று (4) எச்சரித்துள்ளது.

அநுர குமார திசாநாயக்கவின் முதல் பாதீடு, பொதுத்துறை சம்பளத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், நாட்டின் நலிந்த நிதிகளை சரிசெய்யும் முயற்சியாக நீண்டகால சலுகைகளில் ஆழமான குறைப்புக்களையும் செய்துள்ளது.

இந்தநிலையில், இலங்கையின் முக்கிய மருத்துவர்கள் சங்கம் தங்கள் கொடுப்பனவுகளில் குறைப்புக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை முதல் பணி நிறுத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஆசிரியர்களும் பணி நிறுத்தங்களை பரிசீலித்து வருகின்றனர். எனினும், இலங்கையின் சிக்கனத் திட்டத்திற்கான “கடைசி பெரிய உந்துதல்” இந்த பாதீடு என்றும், அதன்பிறகு, முன்னோக்கிச் செல்வது மிகவும் எளிதாக இருக்கும் என்றும், சர்வதேச நாணய நிதிய குழுத் தலைவர் பீட்டர் ப்ரூயர் கூறியுள்ளார்.

அத்துடன் தியாகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர், சீர்திருத்தங்களுடன் இணைந்து கொள்வது, இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழி” என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...