2 5
இலங்கைசெய்திகள்

IMF தொடர்பில் ரணில் பரபரப்புத் தகவல் – இலங்கைக்கு மீண்டும் நெருக்கடி

Share

சர்வதேச நாணய நிதியம் இலங்கையை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டண மறுசீரமைப்பு தொடர்பான அறிவித்தலை மார்ச் 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம், அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தாலும், அந்த திட்டத்தை செயல்படுத்தத் தவறியமை சிக்கலாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் ஐந்தாவது தவணையான 344 மில்லியன் டொலர் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் சர்வதேச நாணய நிதியம் சமர்ப்பித்த திட்டங்களை செயல்படுத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதால் அந்தத் தொகையை வழங்குவதை மேலும் தாமதப்படுத்தும்.

மின்சார கட்டண மறுசீரமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படாததால், 344 மில்லியன் டொலர்களை பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவிடம் ஒப்புதல் பெறுவதற்கு நேரம் எடுக்கும் என்றும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினைகள் காரணமாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீடும் ஆபத்தில் உள்ளது என அவர் கூறினார்.

தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, சமீபத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தும் போது, ​​ஜூன் மாதத்திற்குள் மின்சார கட்டண விடயங்களில் உள்ள சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், பொருத்தமான முறையில் முன்னேறுவது குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...