tamilni 251 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையிடம் ஐஎம்எப் முன்வைத்துள்ள கோரிக்கை

Share

இலங்கையிடம் ஐஎம்எப் முன்வைத்துள்ள கோரிக்கை

அடுத்த வருடம் முதல் பாதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

இதன்படி இலங்கை தனது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணயம் நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் குழுத்தலைவர் பீட்டர் ப்ரூயர் மேற்படி வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

கொள்கையளவில் கடன் வழங்குநர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இரண்டாவது மறுஆய்வுக்கு முன் உண்மையான ஒப்பந்தங்களாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு அடுத்த ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் கொழும்புக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூன் மாதத்திற்குள் இரண்டாவது மதிப்பாய்வை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை, பிரான்ஸ், சீனா மற்றும் இந்தியா தலைமையிலான உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவுடனும், சீனாவின் வங்கியுடனும் கொள்கை ரீதியான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், வணிகக் கடன் வழங்குநர்கள் அல்லது பத்திரதாரர்களுடன் இன்னும் இலங்கை ஒப்பந்தம் செய்யவில்லை.

முன்னதாக பத்திரதாரர்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட கடனை மறுசீரமைப்பது தொடர்பான ஆரம்ப முன்மொழிவு இலங்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...