tamilni 251 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையிடம் ஐஎம்எப் முன்வைத்துள்ள கோரிக்கை

Share

இலங்கையிடம் ஐஎம்எப் முன்வைத்துள்ள கோரிக்கை

அடுத்த வருடம் முதல் பாதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

இதன்படி இலங்கை தனது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணயம் நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் குழுத்தலைவர் பீட்டர் ப்ரூயர் மேற்படி வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

கொள்கையளவில் கடன் வழங்குநர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இரண்டாவது மறுஆய்வுக்கு முன் உண்மையான ஒப்பந்தங்களாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு அடுத்த ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் கொழும்புக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூன் மாதத்திற்குள் இரண்டாவது மதிப்பாய்வை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை, பிரான்ஸ், சீனா மற்றும் இந்தியா தலைமையிலான உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவுடனும், சீனாவின் வங்கியுடனும் கொள்கை ரீதியான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், வணிகக் கடன் வழங்குநர்கள் அல்லது பத்திரதாரர்களுடன் இன்னும் இலங்கை ஒப்பந்தம் செய்யவில்லை.

முன்னதாக பத்திரதாரர்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட கடனை மறுசீரமைப்பது தொடர்பான ஆரம்ப முன்மொழிவு இலங்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நல்லதண்ணி – நுவரெலியா பிரதான வீதியில் மகிழுந்து விபத்து: மூவர் காயம்!

நல்லதண்ணி பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த மகிழுந்து ஒன்று, வீதியை விட்டு விலகி சுமார் 15...

14 12
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,444 ஆக உயர்வு!

கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து...

13 11
செய்திகள்உலகம்

ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம்: நான்கு வீரர்கள் உயிரிழப்பு – அமெரிக்க இராணுவம் உறுதி!

மேற்கு ஈராக் வான்பரப்பில், அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ‘போயிங் KC-135 Stratotanker’ ரக எரிபொருள் நிரப்பும்...

12 12
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை அவசியம் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் மோதல்கள் மற்றும் அவற்றால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களைக்...