இலங்கையின் செயல்திறன் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு
சர்வதேச நாணய நிதிய (IMF) ஆதரவு திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்திறன் “மிகவும் சிறப்பாக உள்ளது” என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் (Krishna Srinivasan) தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், முன்னோக்கி செல்லும் பாதை கடினமானதாகவே உள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, நெருக்கடியில் இருந்து நிலையான மீட்சியை உறுதி செய்வதற்காக திட்டத்தை உறுதியாக கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்கால திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நிதி மாற்றங்கள் மற்றும் நிர்வாக மேம்பாடுகளில் வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதோடு முன்னோக்கிச் செல்லும் பாதை எளிதானது அல்ல. இன்னும் செய்ய வேண்டிய விடயங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், முன்னோக்கிச் செல்லும்போது பல சவால்கள் உள்ளதுடன், அவற்றை வெற்றி கொள்ளும் போதே, பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியே வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.