24 661e40dd05263
இலங்கைசெய்திகள்

இலங்கையைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்

Share

இலங்கையைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்

பொருளாதார நெருக்கடியில் இருந்து, மீள்வதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) பாராட்டு தெரிவித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும் (Shehan Semasinghe), சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருமான கென்ஜி ஒகமுரா (Kenji Okamura) உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் நேற்று (15) ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த மாநாடு கொள்கை வகுப்பாளர்கள், சிவில் சமூகம், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் ஏப்ரல் 19 வரை நடைபெறவுள்ளது.

இரு தரப்பினரும் மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தியதாக செஹான் சேமசிங்க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன் போது ஒகமுரா, சர்வதேச நாணய நிதியத்தின் தொடக்கத்திலிருந்து இலங்கை அடைந்துள்ள கடின உழைப்பால் ஈட்டிய வெற்றிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன (Mahinda Siriwardana) ஆகியோருடன் இணைந்து, செஹான் சேமசிங்க, ஐ.எம்.எப்பின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரிடம் சமீபத்திய சமூக-பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து விளக்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...