tamilnaadi 16 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

Share

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்காகவே குறித்த குழுவானது அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைக்கு முன்னர், இலங்கை அரசாங்கம் கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது மீளாய்வு நடவடிக்கை இந்த வருடம் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் இடம்பெறும்.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற விவாதத்தில், இலங்கையின் பொருளாதாரமானது ஒரு ஸ்திரநிலையை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நிலுவையில் உள்ள செலவுகள் மற்றும் வரி வருமானம் போன்றவற்றை தவிர சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட ஏனைய இலக்குகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...