tamilnaadi 16 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

Share

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்காகவே குறித்த குழுவானது அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைக்கு முன்னர், இலங்கை அரசாங்கம் கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது மீளாய்வு நடவடிக்கை இந்த வருடம் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் இடம்பெறும்.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற விவாதத்தில், இலங்கையின் பொருளாதாரமானது ஒரு ஸ்திரநிலையை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நிலுவையில் உள்ள செலவுகள் மற்றும் வரி வருமானம் போன்றவற்றை தவிர சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட ஏனைய இலக்குகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...