24 66029943e8306
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை

Share

இலங்கை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை

பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருதாக கூறப்படும் இலங்கையில், வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் மீது கணிசமான அளவு வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சுமை குறைந்தப்பட்சம் தற்போது தொடர வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தின் பலதரப்பட்ட பிரிவினரால் இது தொடர்பாக அதிருப்திகள், கவலைகள் வெளியிடப்படுகின்றன.

எனினும் நாடு மீண்டும் வீழ்ச்சியடையாமல் இருக்க, இலங்கை தற்போதைய மட்டத்தில் தொடர்ந்து வரிகளை சுமத்துவது இன்றியமையாதது என்று கடன் வழங்குபவரான சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

“அரசாங்கம் வழங்கும் அத்தியாவசிய சேவைகளுக்கு நிதியளிப்பதற்காக, இலங்கைக்கு முற்றிலும் புதியதல்ல. வரிச்சுமை அவசியமானது என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிறிலங்காவுக்க குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரி வசூலிப்பின் மூலமே அனைவருக்கும் பொதுவான பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்தநிலையில் இந்த பொதுவான பொருட்களை அனைவரும் தொடர்ந்து அனுபவிக்க விரும்பினால், ஒவ்வொருவரும் அளவான பங்களிப்பை வழங்க வேண்டும். அதுவே நெருக்கடியின் மூல காரணங்களில் ஒன்றை நிவர்த்தி செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கணிசமான நெருக்கடியில் இருப்பதையும் உண்மையான வருமானம் கணிசமான அளவில் குறைந்துள்ளதையும் பிரேயர் ஒப்புக்கொண்டார்.

2022 இல் இலங்கை டொலர் மதிப்பின்படி, பொருளாதார நடவடிக்கையில் தமது ஆறில் ஒரு பங்கை இழந்தது, அதே நேரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2022 உடன் ஒப்பிடும்போது 2023 இல் 15 சதவீதம் டொலர் மதிப்பீடு குறைந்துள்ளது.

என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார் எனவே, நிச்சயமாக, இலங்கை மக்கள் அந்த கட்டத்தை ஒவ்வொரு நாளும் உணர்கிறார்கள் என்றும் ப்ரூயர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...