24 662209a37fc07
இலங்கைசெய்திகள்

ஐ.எம்.எப் இன் கொடுப்பனவு : நம்பிக்கை வெளியிட்டுள்ள பொருளாதார நிபுணர்

Share

ஐ.எம்.எப் இன் கொடுப்பனவு : நம்பிக்கை வெளியிட்டுள்ள பொருளாதார நிபுணர்

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை கொடுப்பனவை பெறுவதில் எவ்வித சிரமமும் ஏற்படாது என பொருளாதார நிபுணர் இந்திரஜித் குமாரசுவாமி (Indrajit Coomaraswamy) தெரிவித்துள்ளார்.

அண்மையில் லண்டனில் (London) நடைபெற்ற பேச்சுவார்த்தைச் சுற்றில் தனியார் பத்திரப் பதிவுதாரர்களுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

இந்நிலையிலேயே, இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதியின் கீழ் வரும் மூன்றாவது தவணை கொடுப்பனவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

தற்போது பேச்சுவார்த்தைகள் நல்ல நம்பிக்கையுடன் முன்னோக்கி நகர்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மதிப்பாய்வுக்கு இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில், நல்ல நம்பிக்கையுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இருக்க வேண்டும்.

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆகவே, இந்த விடயத்தை அவநம்பிக்கையுடன் பார்க்கக் கூடாது.

இருப்பினும், பத்திரகாரர்களுடனான பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக முறிந்தால், சர்வதேச நாணய நிதியத்தினால் பணியாளர் ஒப்புதல் தாமதமாக்கப்படும்.

மேலும், தனியார் பத்திரப்பதிவுதாரர்களுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் நான்கு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

எனினும், அவை எதுவும் மறுசீரமைப்பு தொகுப்பின் மையத்துடன் தொடர்புடையவை அல்ல.

எனவே, அரசாங்கம் தனது முன்மொழிவில் முன்வைத்துள்ள அடிப்படை கட்டமைப்பிற்கமைய எந்த பிரச்சினையும் இல்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...