24 662209a37fc07
இலங்கைசெய்திகள்

ஐ.எம்.எப் இன் கொடுப்பனவு : நம்பிக்கை வெளியிட்டுள்ள பொருளாதார நிபுணர்

Share

ஐ.எம்.எப் இன் கொடுப்பனவு : நம்பிக்கை வெளியிட்டுள்ள பொருளாதார நிபுணர்

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை கொடுப்பனவை பெறுவதில் எவ்வித சிரமமும் ஏற்படாது என பொருளாதார நிபுணர் இந்திரஜித் குமாரசுவாமி (Indrajit Coomaraswamy) தெரிவித்துள்ளார்.

அண்மையில் லண்டனில் (London) நடைபெற்ற பேச்சுவார்த்தைச் சுற்றில் தனியார் பத்திரப் பதிவுதாரர்களுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

இந்நிலையிலேயே, இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதியின் கீழ் வரும் மூன்றாவது தவணை கொடுப்பனவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

தற்போது பேச்சுவார்த்தைகள் நல்ல நம்பிக்கையுடன் முன்னோக்கி நகர்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மதிப்பாய்வுக்கு இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில், நல்ல நம்பிக்கையுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இருக்க வேண்டும்.

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆகவே, இந்த விடயத்தை அவநம்பிக்கையுடன் பார்க்கக் கூடாது.

இருப்பினும், பத்திரகாரர்களுடனான பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக முறிந்தால், சர்வதேச நாணய நிதியத்தினால் பணியாளர் ஒப்புதல் தாமதமாக்கப்படும்.

மேலும், தனியார் பத்திரப்பதிவுதாரர்களுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் நான்கு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

எனினும், அவை எதுவும் மறுசீரமைப்பு தொகுப்பின் மையத்துடன் தொடர்புடையவை அல்ல.

எனவே, அரசாங்கம் தனது முன்மொழிவில் முன்வைத்துள்ள அடிப்படை கட்டமைப்பிற்கமைய எந்த பிரச்சினையும் இல்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...