24 6646b4e2adc80
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு

Share

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தங்களைச் செய்ய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடன் வழங்கிய நாடுகள், இலங்கை அரசாங்கம் என்பன சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2033 ஆம் ஆண்டு வரையில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் திருப்திக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்சி இந்த உடன்படிக்கையை திருத்துவதாக கூறியுள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தி திருத்தம் செய்யப்போவதில்லை என கூறியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...