abb 1681149237836 1681149244130 1681149244130
இலங்கைசெய்திகள்

நான் இறக்கவில்லை.! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல ஊடகவியலாளர் அப்துல் ஹமீத்

Share

நான் இறக்கவில்லை.! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல ஊடகவியலாளர் அப்துல் ஹமீத்

நான் இறக்கவில்லை. ஒரு செய்தியை தீர விசாரித்து பதிவிடும் ஊடகப் பண்புதான் இறந்துவிட்டது என தான் மரணித்து விட்டதாக பரவிய வதந்திகள் குறித்து பிரபல ஊடகவியலாளர் பி. எச். அப்துல் ஹமீத் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட காணொளியிலேயே இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மாண்டவன் மீண்டுவந்து பேசுகின்றானே என்று சிலர் வியந்து நோக்கக் கூடும். நேற்று இரவு இலங்கை நேரப்படி நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை.

அந்த விஷம செய்தியை கேட்டு ஆயிரம், பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து என் குரலை கேட்ட பின்பு தான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயப்படுத்தி கொண்டார்கள்.

சிலர் என் குரலை கேட்டதும் கதறி அழுததை கேட்டு என்னால் தாங்க முடியவில்லை. இத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை என்று நான் நினைத்து கொண்டேன்.

செத்து பிழைப்பது என்பது எனக்கு மூன்றாவது அனுபவம் என பதிவிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...